நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? - பகீர் வாக்குமூலம்!

நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? - பகீர் வாக்குமூலம்!

  வி.டி.வித்யாசாகர்,  

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி  தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் நண்பனை கொலை செய்து அவனது இதயத்தை பிய்த்து எடுத்த வாலிபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   இந்நிலையில் நவீனை கொடூர கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணா வை போலிசார் கைது செய்து விசாரித்தனர்.

  அப்போது அவன் சொன்ன வாக்கு மூலம் என்னவெனில்,

  ஹரிஹர கிருஷ்ணா வாகிய நானும் நவீனும், ப்ளஸ் டூ முதல் நேருங்கிய நண்பர்களாவோம். என் காதலி மீது அவர் கைவைத்தான் என்பதற்காக நான் அவனை கொலை செய்து அவனது இதயத்தை பிய்த்து எடுத்தேன்.

  சம்பவதன்று நாங்கள் ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்றோம். அங்கு நவீனை சாலையோரமாக வெறிச்சோடி இருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். 'நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறேன். நீ வேறு பெண்ணுடன் பழகுகிறாயா? மீண்டும் ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறாய்?' எனக் கேட்டேன்.”

“நான் அவளைக் காதலிக்கிறேன், அவளை மறந்துவிடு' எனக் கூறி முதலில் நவீன் என்னை அடித்தான்.

  நானும் பதிலுக்கு என் கைகளால் கடுமையாக அடித்தேன். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டோம். நான் நவீனைத் தூக்கிக் கீழே போட்டு, அவன் மீது அமர்ந்து கழுத்தை நெரித்தேன்.

பிறகு ஆத்திரத்தில் முதலில் நவீனின் ஆடைகளைக் கழற்றி, நான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவனது தலையை வெட்டினேன்.

   பிறகு மார்பின் குறுக்கே வெட்டி இதயத்தை வெளியே எடுத்தேன். அவனது உடலை வெட்டினேன். இரண்டு விரல்களைத் துண்டித்தேன். அதற்குப் பிறகு நவீனின் உடலை யாரும் பார்க்காதவாறு மரங்களுக்குள் இழுத்துச் சென்றுவிட்டேன்,” என கூறியிருக்கிறான்.

 இந்த வழக்கில் ஹரிஹர கிருஷ்ணா மீது ஐபிசி பிரிவு 302, 201 மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(2) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல்லாபூர்மேட் காவல் ஆய்வாளர் வி.சுவாமி தெரிவித்தார்.

  மேலும் அவர் தெரிவிக்கையில், ஹரிஹர கிருஷ்ணா, தானும் நவீனும் 12ஆம் வகுப்பில் இருந்தே நண்பர்கள் என்றும் நவீன் முன்பு ஒரு பெண்ணை விரும்பியதாகவும் கூறினார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நவீன் அந்தப் பெண்ணிடம் சரியாகப் பேசவில்லை எனத் தெரிந்ததும் அந்தப் பெண்ணிடம் ஹரிஹர கிருஷ்ணா ப்ரொபோஸ் செய்ததாகவும் அதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார்.

   அந்த அறிக்கையில் தான் காதலித்த பெண்ணுடன் நவீன் சானு உடலுறவு கொண்டதால் அவரைக் கொலை செய்ய முடிவு செய்ததாக ஹரிஹர கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

   கொல்வற்காக மாலக்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு 200 ரூபாய்க்கு ஒரு மருந்தகத்தில் கத்தியையும் இரு ஜோடி பிளாஸ்டிக் கையுறைகளையும் அவர் வாங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

“பிப்ரவரி 17 அன்று மதியம் எல்.பி. நகரில் அவரை அழைத்துக்கொண்டு ஜீவன் என்ற மற்றொரு நண்பருடன் நாகோலுவில் உள்ள உணவகத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

அதற்குப் பிறகு ஜீவன் வீட்டிற்குச் சென்றுவிட்டான். இரவு வரை ஷாப்பிங் செய்துவிட்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்றோம். இரவு நல்கொண்டாவில் உள்ள ஹாஸ்டலுக்கு செல்லலாமா என நவீன் கேட்டதால் அவனையும் அழைத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினோம். பெத்தா அம்பர்பேட்டையில் மது வாங்கிக் குடித்துவிட்டுப் பிறகு வண்டியில் கிளம்பினோம்.

அந்த நேரத்தில் மது அருந்திவிட்டு அவ்வளவு தூரம் செல்வது நல்லதல்ல என்று கூறினேன். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் யு-டர்ன் எடுத்து திரும்பினோம். அங்கிருந்து நான் நவீனை ரமாதேவி பப்ளிக் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொலை செய்தேன்,”

  “நவீனை கொன்றுவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, நவீனுடைய ஆடைகள், கைபேசி ஆகியவற்றை நான் கொண்டு வந்த பையில் போட்டுவிட்டு, பிராமணப்பள்ளிக்குச் சென்று நவீனின் தலை, பேன்ட், கத்தி, கைபேசி ஆகியவற்றை சாலையோரம் வீசி எறிந்தேன்,” என்று போலீஸிடம் அவர் விளக்கியதாகக் கூறியுள்ளனர்.