பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் சிக்க வைத்த விவசாயி!

அ.ஜோ,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர் பகுதியில்
பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்தவர் பாரதி. இவரிடம் மேல் நாச்சி பட்டு பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக அனுகினார்.
அபோது வருவாய் ஆய்வாளர் பாரதிரவரிடம்1000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத விவசாயி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் ரசாயனம் கலந்த நோட்டுகளை விவசாயியிடம் லஞ்ச ஒழிப்பு போலிசார் கொடுத்தனிப்பினர்.
அதை விவசாயி, பெண் வருவாய் ஆய்வாளரிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.