கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் திருப்பத்தூர் சர்கரை ஆலை! சலுகைகள் பெற ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் கூட்டுறவு ஆலைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கரும்பு விவசாயிகள் ஜீலை மாதம் 15-ம் தேதிக்குள் கரும்பு அதிகளவு பதிவு செய்ய வேண்டுக்கோள்.
திருப்பத்தூர் மாவட்டம், கேத்தாண்டபட்டி கிராமத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது கரும்பிற்கு தமிழகத்திலேயே அதிக விலைகொடுக்கும் ஆலையாக கடந்த 46 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகின்றது.
மற்ற விளைப்பொருட்களின் விலை ஆண்டு முழுவதும் ஏற்ற தாழ்வாக இருக்கும் நிலையில் கரும்பிற்கான கிரயம் ஒவ்வொரு ஆண்டும் ஏறுமுகமாகவே உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் விவசாய பணிகள் செய்வதற்கு விவசாய கூலி ஆட்கள் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறையினை அகல, பார் அமைத்து கரும்பு நடவு செய்து நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களைகொண்டு கரும்பு சாகுபடி செய்யமுடியும் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் சுமார் 134000 மெ.டன்கள் மற்றும் 2023-24 ஆம் ஆண்டு அரவைப்பருவத்தில் சுமார் 106000 மெ.டன்கள் அரவை செய்யப்பட்டு அதற்கான கரும்பு கிரைய தொகையை முழுவதையும் கரும்பு சப்ளை செய்த கரும்பு விவசாய அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு விவசாயிகளுக்கான வருவாய் அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் (KAVIADP) மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களின் (NADP) கீழ் நான்கரை அடிபார் நாற்று நடவுக்கு 1 ஏக்கருக்கு ரூபாய் 5000/- ஒரு பரு கரணை நான்கரை அடி பார் நடவு செய்தால் 1 ஏக்கருக்கு ரூபாய் 1500/ - மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கரும்பு சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு 100% மான்யமும் இதர விவசாயிகளுக்கு 75% மான்யமும்வழங்கப்பட்டு வருகிறது.
எனவே திருப்பத்தூர் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை கரும்பு சாகுபடி பரப்பினை ஆலைக்கு பதிவு செய்யாமல் இருக்கும் கரும்பு விவசாயிகள் வருகிற ஜீலை மாதம் 15-ம் தேதிக்குள் பதிவு செய்து ஆலை மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.