திடீரென போன் போட்டு பயணாளியை விசாரித்த கலெக்டர்!

திடீரென போன் போட்டு பயணாளியை விசாரித்த கலெக்டர்!

ஆர்.ரமேஷ்

தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் 43.9-ஆக உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மகப்பேறு மரண விகிதம் 76-ஆக உள்ளது. மகப்பேறு மரண விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட  கண்காணிப்பு அறையை (வார் ரூம்) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் திடீர்  ஆய்வு மேற்கொண்டார்.

  கண்காணிப்பு அறையில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலுள்ள கர்ப்பிணிகள் அறிக்கைகள் ஆகியவற்றை பார்வையுற்றார்.

  கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களின் தொலைபேசி எண்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

  மேலும் கர்ப்பிணி தாய் ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்ததுடன் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டதா என்பதையும் கேட்டறிந்தார். மாவட்ட கண்காணிப்பு அறைக்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் வலியுறுத்தினார்.

குறிப்பு:மாவட்ட கண்காணிப்பு அறையை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்-9043585596 & 9043585680. ( காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி  வரை   செயல்படும் ).

செய்தி வெளியீடு  : செய்தி  மக்கள்  தொடர்பு  அலுவலர்,  திருப்பத்தூர்  மாவட்டம்.