கண்டுபிடிப்புகளை கண்டு வியந்த கலெக்டர்!

கு.அசோக்
அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார் பள்ளி மாணவர்களின் 250-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றது
வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அரசு நிதியுதவி பள்ளியில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்கும் அறிவியல் கண்காட்சியானது நடைபெற்றது.
இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.
இவ்விழாவில் வேலூர் மேயர் சுஜாதா,முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சூரிய ஒளி மின் உற்பத்தி,இயற்கை வழியில் பெட் ரோல் தயாரித்தல்,தானியங்கி ரோபோ ஜேசிபி,தானியங்கி இருசக்கர வாகனங்களில் இண்டிகேட்டர்,எரிபொருள் உற்பத்தி முறைகள் ,சுற்றுசூழலை தொழிற்சாலைகளிடமிருந்து பாதுகாக்கும் முறைகள் ஆகிய மாணவர்களின் புதிய அரிய கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்கிறது பள்ளி மாணவர்கள் தங்களின் சிந்தனையில் உதித்த செயல்பாடுகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்வுகள் முடிந்தவுடன் அவர்களின் செயல்முறை விளக்கம் செய்து பின்னர் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளோம்.
242 மேற்பட்ட கண்டுபிடிப்புகள் உள்ளது இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் இந்த அறிவியல் கண்காட்சி நடக்கும் பொதுமக்கள் இதனை பார்வையிடலாம் என்று கூறினார்.