வேலூர் வெயிலின் தாக்கத்தினால் பிரதமரின் கூட்டம் காலையில் நடத்தப்படுகிறது!

ஜி.கே.சேகரன்,
பிரதமர் மோடி நாளை வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். வேலூரை பொறுத்தவரை சுட்டெரிக்கும் வெயில் அனல் பறக்கும் காற்று என்கிற சூழல் நிலவுவதால் காலையிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னையில் தியாகராஜ நகர், பாண்டி பஜார் பகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.
நாளை காலை வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வருகிறார்.
பின்னர் அங்கிருந்து நகரின் மையப் பகுதியில் உள்ள கோட்டை வெளி மைதானத்திற்கு கார்கள் அணிவகுக்க அழைத்து வரப்படுகிறார்.
இந்நிலையில் வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் பிரம்மாண்டமான மேடையும், பொதுமக்கள் அமர்வதற்காக பெரிய அளவில் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வருகையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மத்திய போலீஸ் படையும் வரவழைக்கப்பட்டிருக்கிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு கேட்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு செல்லவுள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு வேலூரில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரை அப்துல்லாபுரம் விமான நிலையத்திலிருந்து காரில் அழைத்து வருவதற்காக ஒத்திகை பார்க்கப் பட்டது.
அதேபோல் நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கட்டிடங்கள் திறந்து வைக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும் பலூன் மட்டும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது