கிறுகிறுத்த அதிகாரிகள்...பறிக்கப்பட்டது 74 லட்சம்.... ஆவணத்தில் ஒரு கோடி

கு.அசோக்,
தனியார் ஏ.டி.எம்மிற்கு இண்டிகா காரில் கொண்டு செல்லப்பட்ட 74.5 லட்சம் ரூபாய் பறிமுதல் - 1 கோடி ரூபாய்க்கு ஆவணம் இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் நிலைக்கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே தனியார் ஏ.டி.எம்மிற்கு பணம் நிரப்ப சென்ற இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்த போது, பணத்திற்கான ஆவணத்தினால் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்தால் 74.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த நிலைக்கண்காணிப்பு குழுவினர், அதனை ஆற்காடு அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் சோதனை சாவடியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இண்டிகா காரை சோதனையிடபோது, அதில் 74.5 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
இது பற்றி காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், தனியார் ஏ.டி.எம்மில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச் சென்றதாக கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கான ஆவணத்தை சோதனை செய்தபோது, அதில் 1 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்ததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஆற்காடு சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தனியார் ஏ.டி.எம்மிற்கு இண்டிகா காரில் கொண்டு செல்லப்பட்ட 74.5 லட்சம் ரூபாய் பறிமுதல் - 1 கோடி ரூபாய்க்கு ஆவணம் இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் நிலைக்கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே தனியார் ஏ.டி.எம்மிற்கு பணம் நிரப்ப சென்ற இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்த போது, பணத்திற்கான ஆவணத்தினால் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்தால் 74.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த நிலைக்கண்காணிப்பு குழுவினர், அதனை ஆற்காடு அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் சோதனை சாவடியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இண்டிகா காரை சோதனையிடபோது, அதில் 74.5 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
இது பற்றி காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், தனியார் ஏ.டி.எம்மில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச் சென்றதாக கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கான ஆவணத்தை சோதனை செய்தபோது, அதில் 1 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்ததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஆற்காடு சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.