தமிழகம் பின்தங்கிய நிலையில் உள்ளது! அண்ணாமலை சாடல்!

கு.அசோக்,
இந்தியாவில் அனைத்து மாநிலமும் வளர்ந்தாலும் தமிழகம் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. நாங்கள் கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரிகள் அல்ல கோவிலுக்கு வெளியில் கடவுள் இல்லை என சொல்பவர்களுக்கு தான் எதிரிகள் குடியாத்தத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுகூட்டத்தில் பேச்சு.
வேலூர்மாவட்டம், குடியாத்தம் பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பொது கூட்டம் மண்டல கோட்ட பொறுப்பாளரும் மாநில செயலாளருமான கார்த்தியாயினி தலைமையில் நடந்தது. இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக நிர்வாகி வெங்கடேசன் மற்றும் திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர்.
¢ இந்த என் மண் என் மக்கள் பொதுகூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில் தொழில் முதலீடுகளில் தமிழகம் நான்காவது இடத்திற்கு சென்றுவிட்டது. தமிழகம் எல்லா துறைகளிலும் பின் தங்கிய நிலையில் தான் இருக்கிறது.
நமது இந்திய நாட்டை மத்தியில் ஆளும் பாஜக மோடி அயராது உழைத்து முன்னேற்றி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் முன்னேறுகிறது, ஆனால் தமிழகம் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. மேலும் நான் கடவுள் இல்லை என்பவர்களுக்கு எதிரி அல்ல, எதிரானவர்கள் இல்லை. கடவுள் இல்லை என கோவிலுக்கு வெளியில் கூறுபவர்களுக்கு தான் எதிரானவர்கள்.
இதுவரையில் தமிழகத்தில் எந்த குடும்பங்களுக்கு யாருக்குமோ அரசு வேலை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு அரசு வேலையை பாஜக வழங்குவோம். ஒரு குடும்பத்திற்கு எது தேவையோ அதனை பாஜக இலவசமாக வழங்குவோம் என பேசினார்.