காங் கட்சியின் மூத்த எம்பி-பாஜக வுக்கு தூக்கு- தூக்கியாகிவிட்டார்

P.L.ராஜா,
காங், கட்சியின் மூத்த எம்.பி.,பா.ஜ.க வுக்கு தூக்கு தூக்கியாகிவிட்டார் என கோலார் மாவட்டத்தில் குடுமிப்பிடி சண்டை துவங்கியிருக்கிறது.
கர்நாடகாவில், நடந்து முடிந்த மேலவை தேர்தலில், 25 தொகுதிகளில் 11ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என, அக்கட்சி தலைவர்களே எதிர்ப்பார்க்கவில்லை. இந்த வெற்றிக்கு நான் தான் காரணம், என்று அக்கட்சியின் குட்டி குட்டி தலைவர்களுக்கிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸை பொறுத்தவரை சட்டபேரவையின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை, ஓரம்கட்ட முயற்சி நடப்பதாக, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
அம்மாநிலத்தின், கோலார் மாவட்ட காங்கிரசில், இரண்டு கோஷ்டிகள் உள்ளது. கோலார் மேலவை தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெற்றதும் கோஷ்டி பூசல்மதிகரித்துவிட்டது.
இம்மாவட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.பி., முனியப்பா. என இரண்டு கோஷ்டிகளாக உள்ளனர்.
ரமேஷ்குமார் சமீப காலமாக சித்தராமையாவுடன் நெருக்கமாகி வருகிறார்.
இதனால் முனியப்பாவின் அரசியல் பின்னடைவுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
அப்படியிருக்க, கட்சி கூட்டம் ஒன்றில், முனியப்பா, சித்தராமையாவை குற்றம் சாட்டியுள்ளார்.தற்போது நடந்த மேலவை தேர்தலில், கோலார் தொகுதியில், பா.ஜ.,வுக்கு ஓட்டு போடும்படி, முனியப்பா பிரசாரம் செய்ததாக, ரமேஷ்குமார் குற்றம்சாட்டுகிறார்.
முனியப்பா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, ரமேஷ்குமார் பிடிவாதம் பிடிக்கிறார்.சட்டசபை நடக்கும் நேரத்தில், பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் தூக்கு தூக்கி வேலை பார்ப்பது ஏதோ அங்கு மாற்றம் வரப்போவதாகவே பார்க்கப்படுகிறது.