கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு! விரைவில் கைதா?

   கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு! விரைவில் கைதா?

க.பாலகுரு,

 திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் கீதா மீது போலிசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

 மேற்படி கல்லூரியில் முதல்வராக 2018-ம் ஆண்டு முதல் கோ.கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்தப் பதவியையும் வகித்து வந்தார்.

 அப்படியிருக்க கீதா மீது, கல்லூரி கல்வி இயக்குநர் பதவியை பெற 5 கோடி பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை முறைகேடாகப் பேராசிரியர்களை நியமனம் செய்து பெற்றதாகவும் கீதா மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மாணவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது வந்தன.

 அதுமட்டுமின்றி, கீதா அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தன. இதனால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

  இந்நிலையில், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜன் திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக புகார் அளித்ததின் பேரில் கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் தாலுகா போலீசார் நடவடிக்கைலெடுத்தனர். ஏற்கனவே அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரை போலிஸ் கைது செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.