போக்குவரத்து ஊழியர்கள் 300 பேருக்கு சம்மன்! 1500 பேரிடம் விசாரணை!! மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டம்!!!

போக்குவரத்து ஊழியர்கள் 300 பேருக்கு சம்மன்! 1500 பேரிடம் விசாரணை!! மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டம்!!!

 ம.பா.கெஜராஜ்,

 இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மனும், போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

   இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளார்கள். தற்போது அவர் நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் உள்ளார்.

 இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர்.

   போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.