உயிருடன் விளையாடும் வியாபாரிகள்! வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!!

ரா.மதன்.
சமையல் எரி வாயு கள்ளச் சந்தை உள்ளது விற்கப்படுகிறது. அதிலும் சில்லரை விற்பனையில் படு ஜோராக கிடைக்கிறது. இதற்காக வேலூரில் முழுக்க பலர் கடைவிரித்திருக்கிறார்கள். அதாவது சிஎம்சி மருத்துவமனை எதிரில் உள்ள பாபுராவ் தெரு, காந்தி ரோடு, கள்ளுகடை சந்து மற்றும் சேண்பாக்கம் போன்ற பகுதிகளில் சில்லரை விற்பனை கியால் வியாபாரிகள் உள்ளனர்.
இப்படிப்பட்ட கடைக்காரர்களை நம்பி பல ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி வேலூரின் மையப்பகுதியில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் பல வடமாநிலத்தவர் அங்குள்ள பல லாட்ஜிகளில் தங்குகின்றனர். அவர்களுக்கு இந்த கியாஸ் வியாபாரிகள் கிலோ கணக்கில் கியால் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த மாதிரியான விற்பனையினால் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட இந்த தொழில் வேக்லூர் வடக்கு காவல் நிலைய ஏரியாக்களில் பக்காவாக நடத்தப்பட்டு வருகின்றன.
குரிப்பாக எரிவாயு 2 கிலோ 3 கிலோ மற்றும் ஐந்து கிலோ என சில்லரையில் விற்கப்படுகிறது.
இதை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத் துறையினரோ, வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். சும்மா இல்லை அதுவும் கட்டணத்துக்குத்தான்!
ஆகவே இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வேலூர்வாசிகளின் அவா!