ஒரே ஆண்டில் 3090 போக்சோ வழக்குகள்! தமிழக சாதனை!

கண்ணன்,
தமிழகத்தில், ஒரே ஆண்டில் 3090 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் பேசினார்.
மதுரை காந்தி மியூசியம், அமைதி சங்கம், செசி சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். அதில் சி.இ.ஓ., பேசியதாவது: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 90 சதவீதத்திற்கு மேல் தெரிந்தவர்களால் நடக்கிறது. தமிழகத்தில் 3090 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
''ஊரடங்கு காலங்களில் பாலியல் துன்புறுத்தல், இளம் வயது திருமணங்கள் அதிகம் நடந்துள்ளன.
போக்சோ பற்றின விவரங்களை அறிந்துக் கொள்ளும் வகையில், பள்ளிகளில் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்களை பதிவுசெய்யும். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரும் என்று புள்ளி விவரங்களுடன் பேசினார்.