சியாமளா வீட்டில் ரெய்டு!

காஞ்சி.சுந்தர்,
காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலிசார் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலரான சியாமளா என்பவர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே சியாமளா மீது லஞ்ச புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை ரகசியமாக கண்காணித்தனர். இருந்த போதும், உஷாரான சியாமளா கட்டிங் வாங்குவதை சற்று நிறுத்திவைத்தாராம்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மண்டித்தெரு அருகே உள்ள சியாமளா வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சோதனை நடந்து வருகிறது.