பேரிடராக அறிவிக்காதவர்கள் இதயம் இல்லாதவர்கள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்காததை இதயம் இல்லாதவர்கள் என்று அமைச்சர் திருமுருகன் விமர்சித்தார்.
வேலூர்மாவட்டம்,.வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு புதிய வழித்தடங்களும் மற்றும் 20 புதிய பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்பு லெட்சுமி தலைமையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார்,அமுலு,மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மாவட்ட ஊராட்சி பாபு,தொமுசவை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பேருந்துகளை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவங்கி வைத்த பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், கேரளா விபத்திற்கு தமிழகம் தான் காரணம் மேற்குதொடர்ச்சி மலைகளில் தமிழகம் கனிம வளம் எடுத்துவிட்டார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அறிக்கையில் தொடைமேல் அடித்தால் வாய் வலிக்கிறது என்பது போல் பூகோலம் தெரியாமல் பேசுகிறார்கள்.
வயநாடு விவ காரம், இருதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து அழ வைத்தது.
அதை கூட பேரிடராக அறிவிக்கமாட்டோம் என்றால் அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா கல்லா என்று தெரியவில்லை.
மேற்குத்தொடர்ச்சி மலை சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது வரவேற்கதக்கது.
மேகதாது பிரச்சணையில் அமைச்சர்கள் கையூட்டு வாங்கிவிட்டதாக கூறுவது அண்ணாமலை விவரமே இல்லாத ஒருவர் என அமைச்சர் துரைமுருகன் சொன்னார