பூண்டி கலைவாணன் பங்கேற்ற அரசு விழா!

பூண்டி கலைவாணன் பங்கேற்ற அரசு விழா!

க.பாலகுரு,

 ஒரு லட்சம் மதிப்பிலான ஈமச்சடங்கு உதவித்தொகையை பயனாளிகளுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

  மக்களின் திட்டங்களின் ஒன்றான ஆதிதிராவிடர்களுக்கான ஈமச்சடங்கு உதவித்தொகையை வழங்கும் நிகழ்ச்சி கூத்தாநல்லூரில் நடைபெற்றது.

   கூத்தாநல்லூர் நகரமன்ற தலைவர் பாத்திமா பஷிரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பங்கேற்றார்.

 அதில்  தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பக்கிரிசாமி, நகர மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.