சலூன் கடைக்குள் திடீரென்று நுழைந்த ராகுல் காந்தி!

சலூன் கடைக்குள் திடீரென்று நுழைந்த ராகுல் காந்தி!

நரேஷ்.என்,

 சலூனுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்ட  ராகுல் காந்தி  மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.

 டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் சலூனுக்கு  ராகுல் காந்தி டெல்லியில் திடீரென்று நுழைந்தார்.

அப்போது  அவர் அந்த சலூன் கடைக்காரரிடம் பேசி அவரது குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.

இதை வீடியோவாக பதிவு செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

  அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- எதுவும் மீதி இல்லை. அஜித் பாயின் இந்த வார்த்தைகளும், கண்ணீரும் இந்தியாவில் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்தும்.

 

ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் கதையை சொல்கிறது. முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள், தச்சர்கள் வரை வருமானச்சரிவு மற்றும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த கடை, வீடு மற்றும் சுயமரியாதை போன்ற கனவுகள் திருடப்பட்டு உள்ளன.    எனவே வருமானத்தை அதிகரிக்கும், சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் நவீன தீர்வுகள் மற்றும் புதிய திட்டங்கள்தான் தற்போதைய தேவை.

 திறமைக்கு ஏற்ப தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை என அதில் குறிப்பிட்டிருக்கிறார்