கொடநாடு குற்றவாளி கட்சிக்கு தலைமையேற்ககூடாது! ர.ர.க்கள் ஆசை!

கொடநாடு குற்றவாளி கட்சிக்கு தலைமையேற்ககூடாது! ர.ர.க்கள் ஆசை!

ம.பா.கெஜராஜ்,

  அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என்கிற சர்ச்சையான பிரச்சனை எழுந்துள்ளது.

 சசிகலா ஒருபக்கம் அ.தி.மு.க.வுக்குள் ஆளுமை செய்ய முயல, அதற்கு ஓபிஎஸ் இலைமறைவாக சப்போர்ட் என்பது போல் ஒரு தோற்றம் தெரிகிறது.

   இதையெல்லாம் ஆள்காட்டிகள் மூலம் அறிந்துக் கொண்ட எடப்பாடி கட்சியை தம்பால் தக்கவைத்துக் கொள்ள ப்ளே செய்து வருகிறார்.

   இந்த ப்ளே வை அவர் அவராக செய்யவில்லை. மாறாக அதிகாரத்தில் இருப்பவர்களால் இது செய்யப்படுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புகின்றனர்.

   ஏனெனில் ஆட்சியில் இருப்பவர்களின் சில பல குறைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போது எதிர்கட்சிதான் அதற்கு குரல் கொடுக்க வேண்டும். இது தான் நியதி.

  ஆனால் கொடநாடு வழக்கு தமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்கிற உள்நோக்கத்தால் தமிழகத்தில் எதிர்கட்சி என்ற ஒன்றே இல்லாமல்லாகிவிட்டது. அந்த அளவுக்கு ப்ரெஷர். இதைத்தான் சில அதிமுக தலைகள் விரும்பவில்லை.

    இந்த சந்தடி சாக்கில் தான் பாஜக கொக்கரித்துக் கொண்டிருக்கின்றன. நாங்கதான் எதிர்கட்சி என்பதைப்போல சீன் கிரியேட் செய்துக் கொண்டிருக்கிறது.

  இந்த சூழலை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள சசி செய்த மூவ்மென்ட்டை அறிந்த பின்னரே அதிமுகவில் ஒற்றை தலைமை என்கிற கோஷம் பலமாக எழுந்துள்ளது.

  இந்நிலையில் தான் நடந்து முடிந்த அதிமுக உட்கட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் தனது ஆதரவாளர்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை எடப்பாடியின் ஆதரவாளர்களே கட்சியில் அதிகம் என்கிறார்கள்.

  இது பற்றி ஒரு ரத்தத்தின் ரத்தம் தெரிவிக்கையில், கட்சியையும் ஆட்சியையும் மிலிடிரி போல நடத்தி வந்த அம்மாவின் கொடநாட்டு சொத்துக்களை யார் களேபரம் செய்தது என்பது பலருக்கு புரியாத புதிராக உள்ளது.

  திமுக தான் இந்த கொலை கொள்ளை வழக்கை முறையாக விசாரித்து குற்றவாளியை அடையாளம் காட்டுவோம் என்றது.

 ஆனால் இன்னமும் அது பற்றி தெளிவு கிடைக்கவில்லை. ஆகவே தற்போது ஒற்றை தலைமையை கைப்பற்ற முயன்றுக் கொண்டிருப்பவர் வழக்கின் பின்னணியில் உள்ளார் என்றே தோன்றுகிறது.

   அம்மாவுக்கே துரோகம் செய்ய துணிந்தவரை இப்படியெல்லாம் தலைமையில் அமரவைக்கக்கூடாது என்பது எங்கள் எண்ணம், விருப்பம். அதை அந்த அம்மாவின் ஆன்மா தான் பார்த்து வழி நடத்த வேண்டும் என்கிறார்கள்.