உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!

உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!

 ம.பா.கெஜராஜ்,

 உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள உதயநிதி இன்று அமைச்சராக பதவியேற்றார். இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 அதன்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

 முன்னதாக பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முன் முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து பெற்றார்.

 பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதற்காக நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் மண்டபத்தில் சுமார் 150 இருக்கைகள் போடப்பட்டன.அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு  சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பதவியேற்றவுடன் விளையாட்டுத் துறையில் 2 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

 உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு இடத்திற்கு சென்று ஆசி பெற்றார்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அதனைத்தொடர்ந்து பெரியார் திடல் மரியாதை செலுத்திவிட்டு, பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கும்

கோபாலபுரம், மற்றும் மணி சி.ஐ.டி காலணியிலுள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு செல்கிறார்..