ரோட்டில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற போலீசார்!

கு.அசோக்,
வேலூரில் புத்தாண்டை முன்னிட்டு தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு - பழைய பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி புத்தாண்டை எஸ்பி கொண்டாடினார்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள தென்னிந்திய திருசபை தேவலாயத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயர் எச்.சர்மா நித்யானந்தம் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
புத்தாண்டு 2025 ஆம் ஆண்டை வரவேற்று சிறப்பு வழிபாடுகளை செய்து திருப்பாடல்களும் பாடப்பட்டது. இதே போன்று வேலூர் விண்ணேற்பு அன்னை (ஆர்.சி.)தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் புத்தாண்டை இறைவழிபாட்டுடன் துவங்கும் விதமாக திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையிலான போலீசார் மற்றும் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார்கள்.
இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டுக்கு அனைத்து பிரிவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது அந்த சாலையை திடீரென்று ஒருவழி பாதையாக மாற்றினர்.
"தேவாலயம் பக்கமாக போக வர வாகனங்களை அனுமதித்த போலீசாரால் வழிபாட்டில் கலந்துகொண்ட வந்தவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது".
திருப்பத்தூர் மாவட்டம்,
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு 2025 முன்னிட்டு காவல் துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்.திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு(2025) வரவேற்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய் குமார் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு கேக் வெட்டினார்.
நிகழ்ச்சியில் நகர, கிராமிய மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், ரோந்து பணி காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள், தனிபிரிவு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இராணிப்பேட்டை,
இராணிப்பேட்டையில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் - காவல்துறையினர் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை வக்கீல் தெருவில் வசித்து வரும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழந்தைகள் பெண்கள் என ஏராளமானோர் ஒன்று கூடி 2025 ஆங்கில புத்தாண்டை சீரும் சிறப்புமாக பட்டாசு வெடித்தும் மெகா சைஸ் கேக் வெட்டியும் கொண்டாடினார்கள்..
இதனிடையே புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 546 காவல்துறை அதிகாரிகள் 55 இடங்களில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி கவனம் செலுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட முழுவதும் குற்றங்களை தடுக்க வகையில் 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் 10 நான்கு சக்கர ரோந்து வாகனம் 55 இருசக்கர ரோந்து வாகனங்கள் அதேபோல் ட்ரோன் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டது.
புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள்
2-க்கும் மேற்பட்ட நபர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க 55 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.