கொரோனா விதிமுறைகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வு கூட்டம்! திருப்பத்தூர் ஆட்சியர் பங்கேற்பு!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்துதல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு வருகின்ற 12.02.2022 அன்று முதல் 15.02.2022 வரையிலும் 16.02.2022 அன்று முதல் 18.02.2022 வரை மற்றும் 20.02.2022 அன்று ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இத்தகுதி தேர்வு காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேலை நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இணையவழியில் தகுதி தேர்வை 160 தேர்வு வாளர்கள் எழுத உள்ளார்கள். இத்தேர்வு நமது மாவட்டத்தில் உள்ள ஆதியூர் பொதிகை பொறியியல் தொழில்நுட்பக்கல்லூலீயில் நடைபெற உள்ளது.
மேலும் தகுதி தேர்வு எழுதும் தேர்வாளர்கள் வருவதற்கான பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேற்கொள்ள வேண்டும். துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் சார்பில் ஒரு மருத்துவக்குழுவை தேர்வு மையத்தில் அமைக்கப்பட வேண்டும். தீயணைப்பு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து தேர்வு மையத்தின் அருகில் நிறுத்தப்பட வேண்டும்.
தேர்வாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தையும் தேர்வு நாளுக்கு முன்பாகவே மேற்கொள்ள வேண்டும்.
இந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அனைவரும் அணிய வேண்டும், தேர்வாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமிநாசினிகொண்டு சுத்தம் செய்ய வேண்டும் ஆகியவற்றையை அனைவரும் பின்பற்றி தேர்வை நடத்தப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.வில்சன்இராசசேகர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பாராஜூ, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திரு.அய்யன்னன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்பார்வை பொறியாளர் திரு.பன்னீர்செல்வம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.