அந்த வண்டிதான் வேண்டும்... போலீஸ் ஏலத்தில் கலகல... கண்ணீர்விட்டு அழுத பெண்!

கு.அசோக்,

திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்...500 முதல் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை ஏலம் போன இருசக்கர வாகனங்கள் என் வண்டிதான் வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுத பெண்.

திருப்பத்தூர் மாவட்டம்,

 2023-24 ஆண்டில் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் மற்றும் மதுவிலக்கு பிரிவால் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், கள்ளச்சாராயம், எரி சாராயம் கடத்திவரப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்படி ஏலத்திற்காக கொண்டுவரப்பட்டது.

 இந்நிலையில் பொதுமக்கள் 100 ரூபாய் அனுமதிச் சீட்டு வாங்கி ஆர்வத்துடன் ஏலத்தில் கலந்து கொண்டனர்.   அதில், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 243 வாகனங்கள்  இதில் 500 முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருசக்கர வாகனங்கள் ஏலம் போனது.

  மேலும் கார், ஆட்டோ உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது. மேலும் தர்மபுரியை சேர்ந்த சரவணன் என்பவர் 50 டோக்கனங்களைப் பெற்றுக் ஏலம் முடிந்த பிறகு வந்ததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பி சென்றார்.

   மேலும் ஒரு இருசக்கர வாகனம் உதிர் பாகங்களாக தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியது. ஏலத்தில் வாகன உரிமையாளர்களும் வாகனங்களை எடுப்பதற்காக வந்திருந்தனர்.

  அப்பொழுது பொது ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருந்தபோதிலும் பெண் ஒருவர் இந்த இரு சக்கர வாகனம் வேண்டும் என கண்ணீர் விட்டு அழுது கொண்டே நின்ற காட்சிகளையும் பார்க்க முடிந்தது.

  அதனைத் தொடர்ந்து ஏலம் விடப்பட்ட இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் எல்லாம் ப்ராப்பரா இருக்கணும் எல்லாமே கரெக்டா செய்யணும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார்.

  மேலும் அதிக விலைக்கு ஏலத்தைக் கேட்டு எடுத்தவர்கள் மீண்டும் பணம் கட்டி வாகனத்தை எடுத்துச் செல்லாமல் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

   இந்த ஏலத்தில் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சௌந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், நந்தினி தேவி மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம்,

  இராணிப்பேட்டையில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது . அப்போது வாலிபர் ஒருவர் போலீசாரின் காலில் விழுந்து கதறினார்.  அரக்கோணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசாரிடம் கெஞ்சிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ராணிப்பேட்டைமாவட்டத்தில் 20 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.  இந்த ஸ்டேஷன்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் 33 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

 இந்த வாகனங்கள் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் என்னுடைய இரு சக்கர வாகனத்தை எனக்கே ஏலம் விட வேண்டும்,  என்னுடைய நண்பர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பிய போது அவர் சுப நிகழ்ச்சிக்கு ஒன்றுக்காக மதுபானங்கள் வாங்கி வந்த போது போலீசார் பிடித்து விட்டனர்.

 எனவே என்னுடைய இருசக்கர வாகனத்தை எனக்கே தர வேண்டும் என்று போலீசாரின் காலில் விழுந்து கதறினார்.

 மேலும் கை எடுத்து கும்பிட்டு யாரும் ஏலம் கேட்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார்.  ஆனால் அதையும் மீறி குறிப்பிட்ட தொகைக்கு ஏலம் போனது. அதே நேரம் அந்த வாகனம் வாழைப்பந்தல் வாலிபருக்கே ஏலமாக தரப்பட்டது. மேலும் அரக்கோணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தவணையில் வாங்கிய இருசக்கர வாகனமும் மதுவிலக்கு வழக்கில் சிக்கியது.

  அந்த வாகனத்தை எனக்கே தர வேண்டும் என்று போலீசாரிடமும், ஏலத்துக்கு வந்திருந்தவர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.  அதையும் மீறி சிலர் தொகையை உயர்த்தினர்.அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவர் கெஞ்சி கேட்டும் ஏலத்தை உயர்த்தலாமா என்றார். 

   அதன் பின்னர் போலீசார் தடாலடியாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அந்த பெண்ணுக்கு ஏலமாக வாகனத்தை கொடுத்தனர்.

  இந்த சம்பவங்கள் ஏலம் விடம் இடத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.