மணல் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு! பள்ளிகொண்டான் மணல் குவாரி மீண்டும் மூடப்பட்டது! 

மணல் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு! பள்ளிகொண்டான் மணல் குவாரி மீண்டும் மூடப்பட்டது! 

  ஜி.கே.சேகரன், 

   தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ்மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியனிடம் மனு ஒன்றை அளித்தனர். ஆனால் அவர்கள் மனு அளிப்பதற்கு முன்பே பள்ளிகொண்டான் அருகே உள்ள கந்தநேரி மணல் குவாரி மீண்டும் மூடப்பட்டது. 

 அந்த மனுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகொண்டா கந்தநேரி அரசு மணல் குவாரியை அமலாக்க துறையினர் சோதனை நடத்தி அங்கு இருக்கும் மணல் ஆகியவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கடந்த வாரங்களுக்கு முன்பு மணல் ஆன்லைன் மூலம் அனைவருக்கும் விற்பதற்காக அரசாணை அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதை தொடர்ந்து அங்கு மணல் எடுக்க  சென்ற எங்களுக்கு மணல் எடுப்பதற்காக அனுமதி தரவில்லை.

  உள்ளூர் மாவட்ட கவுன்சிலர் மற்றும் லோக்கல் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் என்றும் சொல்லிக்கொண்டு அவர்கள் மணல் அள்ளிச் செல்கிறார்கள். வேறு எவரையும் மணல் அள்ள  விடுவதில்லை.

   அவர்கள் மட்டும் அவர்களுடைய பெரிய பெரிய லாரிகளில் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஏற்றிச் சென்று இரவோடு இரவாக விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.

   எங்களுக்கு ரசீது வழங்கியும் மணல் எடுக்க அனுமதி மறுப்பதோடு குண்டர்களை வைத்து விரட்டியடிக்கின்றனர். இது குறித்து காவல்துறையிடம் மனு அளித்தும் எங்ககளைத்தான் மிரட்டுகிறார்களே தவிர அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.

மணல் வியாபாரத்தை மட்டும் நம்பி லாரியில் முதலீடு செய்த நாங்கள் இங்கு வறுமையில் தவிக்கிறோம்... ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு எங்கள் அனைவருக்கும் மணல் எடுப்பதற்காக உரிமை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

  மனு அளித்தபோது வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் ஓட்டுனர்கள் மற்றும் தலைவர்கள் உடனிருந்தனர்.

  இந்நிலையில் மணல் குவாரி நேற்று காலையே மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்