விஜய் மாநாடுக்கு பலமாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைப்பு!

விஜய் மாநாடுக்கு பலமாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைப்பு!

ம.பா.கெஜராஜ்,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இந்நிலையில் அங்கு அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் 5 ஆயிரம் போலீசாருக்கு மேல் பாதுகாப்பு பணிக்காக களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

 இதற்கென பல மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

 மாநாடு நடைபெறவிருக்கும் பகுதியானது காவல் துறையின் வடக்கு மண்டல உள்ளது.

 ஆகவே வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில், 2 டி.ஐ.ஜி., 10 காவல் கண்காணிப்பாளர், 20 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,  50 டி.எஸ்.பி., 200 ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்களாம்.

 அதே போல் த.வெ.க.சார்பில் மகளிருக்கு தனி பாதுகாப்பு வசதி, அனைத்து தரப்பினருக்கும் எந்த சிக்கலும் வராத வகையில் சட்ட ஆலோசனை குழு, வாகனங்கள் வழிகாட்டும் குழு என 27 குழுக்களை அமைத்து இருக்கிறார்.

  அதே போல், உடல் நலம், பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று விஜய் விடுத்த வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.

 அப்படியிருக்க முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் விஜய் கட்சியில் இணைய இருக்கிறார்கள். பிரபல நடிகர்களும் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மாநாடு நல்லபடியாக நடந்து முடிந்தால் சரி.