நீதி தேவதை சிலை பாரதமாதா ரேஞ்சுக்கு மாற்றம்! உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு!

நரேஷ்.என்,
நீதி தேவதை சிலையை பாரதமாதா ரேஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எதிர்புகள் கிளம்பியிருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் நூலகத்தில் ஆறடி உயர நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. அது பழைய சிலையுடன் ஒப்பிடும்போது பல்வேறு மாற்றங்கள் இருந்தது.
பழைய நீதி தேவதையின் கண்கள் துணியால் கட்டப்பட்டிருந்த நிலையில், புதிய சிலையில் கண்கள் துணியால் மூடப்படவில்லை. ஒரு கையில் தராசும், மறு கையில் வாளுக்கு பதிலாக அரசமைப்பு சட்ட புத்தகமும் புதிய சிலையில் இடம்பெற்றது.
தலையில் கிரீடத்துடன் வெள்ளை நிற உடையில் தலையில் கிரீடத்துடன் பாரதமாதா போல புதிய சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த மாற்றத்துக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எஸ்சிபிஏ தலைவர் கபில் சிபல் மற்றும் நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீதி தேவதையின் சிலை மற்றும் சின்னத்தில் உச்சநீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் நிர்வாக குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது.
நீதி நிர்வாகத்தில் சமபங்குதாரர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக எங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.