ஓரங்கட்டப்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்! பொன்முடியை சந்தேகப்படும் உ.பி.க்கள்!

வளத்தியார்,
செஞ்சி சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஸ்தான். இவர் தற்போது சிறுபாண்மைபிரிவு அமைச்சராக உள்ளார். செஞ்சி விழுப்புரம் மாவட்டத்தை உள்ளடகிய தொகுதியாகும். இந்நிலையில் இதே மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொன்முடி. இவர் உயர்கல்வி துறை அமைச்சராக உள்ளார்.
ஆக ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள். இதனால் இவ்விருவருக்கும் ஏழாம் பொருத்தம் என்கிறார்கள்.
அதற்கு தூபம் போடுவது போல ஒரு நிகழ்வு அங்கு நடந்துள்ளது.
அது பற்றின விவரம் வருமாறு,
செஞ்சியை அடுத்துள்ள மைலம் பகுதியில் உள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கல்லூரி 80-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் செஞ்சி மஸ்தான் பெயர் இடம்பெறவில்லை.
ஆனால் அமைச்சர் க.பொன்முடியின் பெயரை பிரதானப்படுத்தியிருந்தனர். இது பற்றி மஸ்தானின் ஆதரவாளர்கள் கேட்ட போது அவர் உயர்கல்வி அமைச்சர் என்று சப்பைகட்டு கட்ட்டப்பட்டது.
இந்நிலையில் விழாவில் அமைச்சர் பேராசிரியர் க.பொன்முடி தலைமை வகித்து 335 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே தனது ஆதரவாளர்கள் புடைசூழ, விழுப்புரம் மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான செஞ்சி மஸ்தான் திடீரென நுழைந்தார்.
அழைப்பிதழில் பெயர் போடாவிட்டாலும், பட்டமளிப்பு விழாவுக்கு வந்த அமைச்சருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பு விருந்தினர் நாற்காலியை வழங்கப்பட்டது. ஆனால், அதனை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிராகரித்துதோடு,, பார்வையாளர்களுடன் அமர்ந்துக் கொண்டார்.
இது குறித்து விழா மேடையில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் செஞ்சி மஸ்தான் பெயரை சிறப்புரையிலாவது போட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
இதை கேட்ட மஸ்தானின் ஆதரவாளர்கள், அமைச்சர் க.பொன்முடிக்கு விழா அழைப்பிதழ் கொடுத்த போது, அதில் செஞ்சி மஸ்தான் பெயர் இடம் இல்லை என்பது தெரியாதா? இது திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டது தான் என்று குமுறினார்கள்.
மேற்படி அழைப்பிதழில் அமைச்சர் மஸ்தானின் பெயர் இடம் பெறாத விவகாரம் சூட்டை கிளப்பியதால் பட்டமளிப்பு விழாவுக்கு முன் தினம் இரவு கல்லூரி நிர்வாகத்தினர் அமைச்சர் மஸ்தானுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாகவும், அதன் பேரில் தான் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு சென்றதாகவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே இப்படித்தான், இந்த பகுதியின் பந்தா அரசியல்வாதியான செஞ்சி இராமசந்திரனை செய்தனர், அது மஸ்தான் மேட்டரிலும் தேவையில்லையே என்கிறார்கள் உள்ளூர் அரசியல் வாதிகள்.
எது எப்படியோ ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே...கல்லூரியை சொல்கிறார்கள்.