புறக்கணித்த கிராமங்கள்! அதிகாரிகளின் பாரா முகத்தால் பிரச்சனை!

கு.அசோக், க.பாலகுரு,
மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்றது. இதில் மந்தமான வாக்குபதிவு தொடங்கி மாலையில் விருவிருப்பு கூடியது. அப்படியிருக்க தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மக்கள் வாக்களிக்க மறுத்தனர். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி ஏற்கனவே அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை சொல்லி வந்த நிலையில் அதற்கு பலன் கிடைக்காததால் வாக்களிக்க மறுத்து அடம்பிடித்தனர்.
கடலூர்,
கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி ஒன்றியம் எஸ்.ஏரிப்பாளைம் கிராமத்தில் சுமார் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமம் சிறுவத்தூர் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ளது. இதனால், அரசின் திட்டப்பணிகள் மற்றும் நல உதவிகள் கிடைப்பதில் எஸ்.எரிப்பாளையம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள், எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்
ஆனால் வழக்கம் போலவே அதிகாரி சார்கள் கண்டுகொள்ளவில்லை.
அப்படியிருக்க, எஸ்.ஏரிப்பாளையம் கிராம பொதுமக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணித்தனர்.
அதே போல், அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி முதனை ஊராட்சியில் இருந்து புதுவிருத்தக்கிரிகுப்பம் மற்றும் பரவளூர் ஊராட்சியில் இருந்து கச்சிபெருமாநத்தம் ஊராட்சியை உருவாக்க வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், விருத்தாசலம் வட்டாட்சியர், புதுவிருத்தகிரிக்குப்பம் மற்றுமந் கச்சிபெருமாநத்தம் கிராம மக்களிடமும், பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.
திருவாரூர்,
முத்துப்பேட்டை அடுத்த தொண்டியகாடு முனங்காடு கிராமத்தில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்து ஓட்டு போட வரவில்லை, அடிப்படை வசதியை செய்து கொடுக்காத அதிமுக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம். 2 அரசு அலுவலர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தொண்டியகாடு ஊராட்சி, முனங்காடு கிராமத்தில் தொண்டியகாடு - முனங்காடு சாலையை சீரமைக்கவும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத தொண்டிய காடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த கிராமத்தில் உள்ள முனங்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 274 நம்பர் பூத் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் அலுவலர்கள் இன்று காலை ஈடுபட்டனர். ஆனால் கிராம மக்கள் கூறியபடி யாரும் காலை 10 மணி வரை வாக்களிக்க யாரும் வரவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்துப்பேட்டை வட்டாட்சியர் குணசீலி நேரில் பார்வையிட்டார் மேலும் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினா.¢ ஆனால் ஓட்டு போட வர மருத்துவிட்டனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த விளாங்ககாடு ஊராட்சி கிளார்க் வேதப்பன், வாக்கு சாவடி நிலைய அலுவலர் அம்சவள்ளியும் கிராம மக்கள் எடுத்த முடிவுக்கு கட்டுபட்டு ஓட்டு போட முதலில் மருத்தனர்.
¢ பின்னர் வட்டாட்சியர் குணசீலி அறிவுறுதலுக்கு பின்னர் இந்த இருவர் மட்டுமே வாக்களித்தனர். இதனால் அங்கு திருத்துறைப்பூண்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்மணி மற்றும் அலுவலர்கள் முகாமிட்டுள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இராணிப்பேட்டை,
நெடுஞ்சாலைதுறையினரிடம் மேம்பாலம் அமைத்து தர கோரி பலமுறை கேட்டு நடையாய் நடந்தும் கூட அவர்கள் கண்டுகொள்ளாததால் கருப்பு கொடிகளை கிராமத்தில் ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு நடத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓச்சேரி அருகேயுள்ளது அவளூர் கிராமம். இங்கு மொத்தம் 1279 வாக்காளர்கள் உள்ளனர். அப்பகுதியில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்பாலம் அமைக்க வேண்டுமென இவர்கள் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தேர்தல் நாளான கிராம மக்கள் அக்கிராமமக்கள் அனைவரும் வாக்களிப்பதை புறக்கணித்தனர்.
கிராமங்களில் கருப்பு கொடியை கட்டி தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர். வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால் வாக்குசாவடி யாருமில்லாமல் காட்சியளித்தது.
மேலும் காலை நிலவரப்படி அந்த பூத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் செலுத்திய 10 ஓட்டும் மற்றும் அவளூரிலிருந்து வெளியூரில் தங்கி ஓட்டு செலுத்த வந்த 3 பேர் என மொத்தம் 13 வாக்குகள் மட்டுமே இயந்திரத்தில் பதிவானது.
ஒட்டுமொத்த கிராமத்தினரே தேர்தலை புறக்கணித்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.