கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு!

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு!

கு.அசோக்,

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கல்குவாரிக்கு எதிரான வாசகங்களை பிடித்தபடி ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம், நம்பரை ஊராட்சிக்குட்பட்ட மோகனாவரம் கிராம பகுதி அருகே 4.04.50எக்டர் பரப்பளவில் தனா ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனம் புதிதாக கல் மற்றும் கிரொவல் குவாரியை அமைக்க இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 அந்த வகையில் மோகனாவரம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கைகளில் கல்குவாரி அமைக்க கூடாது என்ற வாசகங்கள் பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கல்குவாரி அமைப்பதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்தினர் வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்

 மேலும் ஏற்கனவே செயல்பட்டு வரக்கூடிய கல்குவாரிகளால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கல்குவாரிகளில் விதிமிறல்கள் நடைபெறுவது குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயம் மற்றும் கால்நடைகள்  பாதுகாக்கும் வகையில் கல்குவாரிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்.