உங்களைப்போல நானும் கலெக்டர் ஆவேன்! ஆட்சியரிடம் சொன்ன சிறுமி!

உங்களைப்போல நானும் கலெக்டர் ஆவேன்! ஆட்சியரிடம் சொன்ன சிறுமி!

கு.அசோக்,

 உங்களைப் போலவே நானும் கலெக்டர் ஆகுவேன் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு பள்ளி மாணவி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கோவிந்தச்சேரி பகுதியை சேர்ந்த குப்பன் என்பவர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு கடுமையான உடல்நல  குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு ஹரிணி, பூவி, தனுஷ்வரன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இதில் பிரியதர்ஷினி குடும்ப சூழ்நிலை காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தனியார் துறையில் வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவை சந்தித்து மனுவினை வழங்கினார்.

 அப்போது பிரியதர்ஷினி மகள் ஹரிணி என்பவர் திடீரென மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் நானும் உங்களைப் போலவே கலெக்டர் ஆகணும் ஆசை எனக்கு கனவு என ஆட்சியரிடம் கூறி கை கொடுத்து வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றார்.

இச்சம்பவத்தால் அரங்கத்தில் கூடியிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.