பாலாற்று வெள்ளத்தில் நீந்தும் மாணவர்கள்! ஆபத்தோ... ஆபத்து!

பாலாற்று வெள்ளத்தில் நீந்தும் மாணவர்கள்! ஆபத்தோ... ஆபத்து!

  கு.அசோக்,

  ஆபத்தை உணராத மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து குளித்தும் நீந்தியும் சாகசம் - உயிர் பலி தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

  வேலூர் மாவட்டம்,ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக பாலாறு நிரம்பி வெள்ளமானது பெருக்கெடுத்து ஓடுகிறது.

  திருப்பத்தூர்,வாணியம்பாடி,ஆம்பூர் வழியாக விரிஞ்சிபுரம்,காட்பாடி ஆகிய இரண்டு புறங்களிலும் பாலாற்றில் வெள்ளநீர் பயங்கர வேகத்துடன் கரைபுரண்டு ஓடுகிறது.

  இந்நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் ஆற்றில் இறங்கி கைபேசியில் மற்றவர்களை வீடியோ எடுக்க சொல்லி உயிரை பணயம் வைத்து ஆற்றுவெள்ளத்தில் நீந்தி குளித்தும் சாகாசம் செய்து வருகின்றனர்.

  மேலும் பலர் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கின்றனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உயிர் பலி ஏற்படுவதற்கு முன்னர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆற்றில் யாரும் இறங்காத வண்ணம் காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.