செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷன் சக்சஸ்! காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷன் சக்சஸ்! காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

ம.பா.கெஜராஜ்,

சென்னை காவேரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு  இதயஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என மருத்துவர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய நோய் ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மேல் சிகிச்சைக்காகவும் இதய அறுவை சிகிச்சைக்காகவும் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

அங்கு முழு நேர மருத்துவ கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று காலை  தொடங்கி சுமார் 5 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை நடந்தது.

அதில் நான்கு அடைப்புகள் இதய ரத்த நாளங்களில் இருந்ததாகவும் அதை வெற்றிகரமாக அகற்றியதாகவும் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக இருப்பதாகவும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிகிச்சையில் இருக்கும் ஒருவரை விசாரிக்கலாமா? எப்படி விசாரிக்க முடியும்? சிகிச்சை முடிந்த பின்பு விசாரிக்கலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தவுடன் ஆள்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது முடிந்த பின்னர் இது பற்றி கவனிக்கலாம் என்று சொல்லி அமலாக்க துறையின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டது.