தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது! முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு!!

க. பாலகுரு,
திமுக அரசை கண்டித்து திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு.
தமிழகத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் விடியா திமுக அரசை கண்டித்தும், ஊழல் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில்...
மது பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள்.. இதன் மூலம் வருடத்திற்கு 3600 கோடி ரூபாய் பணம் எல்லாம் எங்கே செல்கிறது.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமா? ஸ்டாலின் குடும்பத்திற்கு செல்கிறது.
3600 பார்கள் உரிமம் இல்லாமல் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதன் மூலம் வரும் பணமும் ஸ்டாலினுக்கு தான் செல்கிறது.. அதற்காகவே ஸ்டாலின் பயப்படுகிறார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து மது குடித்து பல பேர் இறந்து வருகின்றனர். மது குடித்துவிட்டு சாப்பிடாத காரணத்தால் இறந்து விட்டதாக அரசு கதை கட்டுகிறது. மது மூலம் அனைவரையும் கொன்று வருகிறது இந்த ஆட்சி.
திமுக ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் கூடவே வரும். 52%மின் கட்டனம் உயர்தியுள்ளனர், குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது இதையெல்லாம் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது என்று பேசினார்.
தொடர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பி கே யு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.