ஸ்பாட்டில் வழங்கப்பட்ட முதியோர் உதவி தொகை ஆணை!

ஸ்பாட்டில் வழங்கப்பட்ட முதியோர் உதவி தொகை ஆணை!

 த.நெல்சன்,

  வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் 1432 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்  தீர்வாயம் (ஜமாபந்தி) 2023 தொடங்கப்படுவதை தொடர்ந்து,  வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்/ வருவாய் தீர்வாய அலுவலர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,  அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுகொண்டார். 

  முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளித்த முதியவருக்கு, மனுவை ஆய்வு செய்து உடனடியாக முதியோர் உதவிக்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

   இந்நிகழ்வில்  உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) திரு. வி.பிரசன்ன குமார், இ.கா.ப.,  வேலூர் வட்டாட்சியர் திரு. செந்தில், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் திரு. சத்தியமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.