அய்யய்யோ!உள்ளாட்சி அமைப்பு தலைவிகளின் வூட்டுகாரங்க தொல்லை தாங்க முடியலையே!

அய்யய்யோ!உள்ளாட்சி அமைப்பு தலைவிகளின் வூட்டுகாரங்க தொல்லை தாங்க முடியலையே!

  கு.அசோக்,

  நூறு நாள் வேலை வழங்குவதில் முறைகேடு செய்வதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவனை கண்டித்து சாலை மறியல் நடத்தப்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம் ,நாட்றம்பள்ளி அடுத்த தெக்குபட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பூங்கொடி. இவரது கணவர் யுவராஜ். இவர் உறவினர்களுக்கும் மட்டும் 100 நாள் வேலை திட்டம் வழங்கப்படுவதாகவும், வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து 100 நாள் திட்டம் வேலை செய்ததாக கூறி தெக்குபட்டு கிராம மக்கள் அரசு பேருந்து சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.