நர்ஸ் தற்கொலை முயற்சி! குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார்!

கு.அசோக்,
குடும்ப பிரச்சினை காரணமாக செவிலியர் தானும் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்கல்நாத்தம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆலங்காயம் பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு முதல் திருமணம் நடைபெற்று முதல் மனைவி இருக்கும் நிலையில் இரண்டாவதாக நாட்றம்பள்ளி அருகே பச்சூர் அடுத்த சுண்டம்பட்டிபகுதி சேர்ந்த பெருமாள் மகள் பிரேமா(28)என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கிரி வர்ஷினி (9)மற்றும் தரணிமித்ரா (3) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரேமாதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.மேலும் கணவன் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கணவன் மனைவியே சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது என் காரணமாக அடிக்கடி தொலைபேசியில் சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது.அதனை தொடர்ந்து இன்று தொலைபேசியில் சண்டை அதிகமாக மனம் உடைந்த பெருமா வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தானும் சாப்பிட்டும் தனது குழந்தைகளுக்கும் குடிக்க வைத்தும் தற்கொலைக்கு முயன்று உள்ளனர் ¢ இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உடனடியாக மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக செவிலியர் தானும் தனது குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.