ஸ்பாட்டில் சஸ்பெண்டு ஆன வார்டன்! அமைச்சர் உதயநிதி கறார்!!

ம.டெல்லிராஜன்,
ஆதிதிராவிடர் அரசு விடுதியின் வார்டனை ஸ்பாட்டிலேயே சஸ்பெண்டு செய்து அதிரடி காட்டினார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி.
இவர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீடீரென அங்கு உள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்றார்.
மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுகளின் அடிப்படையில் கோப்புகளில் குளறுபடிகள் இருந்ததால் விடுதியின் வார்டன் முருகன் என்பவரை சஸ்பெண்ட் செய்ய ஸ்டாப்பிலேயே உத்தரவிட்டார்.