சார் ஒரு டவுட்டு! பச்ச தண்ணியா!? சாராயமா?

சார் ஒரு டவுட்டு! பச்ச தண்ணியா!? சாராயமா?

ஜி.கே.சேகரன்,

வேலூர் மாவட்டத்துல கள்ளச்சாராயம் ரைடு என்றால் உடனே அல்லேரி மலைதான்.  எத்தனை தடவை அங்கு சாராயம் அழிக்கப்பட்டதாக சொன்னாலும் கூட தொடர்ந்து அங்கு அந்த தொழில் நடந்துக் கொண்டிருப்பதாக போலிஸ் தரப்பு ஆதாரங்களே தெரிவிக்கின்றன.

 இந்நிலையில் தான் அல்லேரி கோணம்பட்டி மலைபகுதியில் 780 லிட்டர் சாராய ஊரல்களை காவல்துறையினர் அழித்ததாக சொல்லியிருக்கிறார்கள்.

 அதாவது, வேலூர்மாவட்டம்அல்லேரி கோணம்பட்டி மலைபகுதியில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் கள்ளசாராயம் காய்ச்சுவதை தடுக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது மலைபகுதிகளில் ஆங்காங்கே சாராயம் காய்ச்சுவதற்காக லாரி டியூப்புகளில் வைத்திருந்த 780 லிட்டர் சாராய ஊரல்களை கீழே கொட்டி அழித்தனர்.

  இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சாராயம் காய்ச்சியவர்களை தேடி வருகின்றனர் தொடர்ந்து காவல்துறையினர் சாராய ஊரல்களை மலைபகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி அழித்து வருகின்றனர் இதனை மீறி சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியிருப்பதுடன்,

லாரி டியூப்புகளில் இருந்த சாராயத்தை கீழே ஊற்றி அழிப்பது போன்ற தகவலையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

 அதைப் பார்ப்பதற்கு பச்ச தண்ணி போல உள்ளதால், அவற்றை பார்ப்பவர்கள் இது சாராயமா அல்லது பச்ச தண்ணியா என்று டவுட்டு கிளப்புகிறார்கள்.

   இதுல பாருங்க இது போன்ற டியூபுகல், கருப்பு வெல்லம், இதெல்லாம் கீழிருந்துதான் மலைக்கிராமங்களுக்கு செல்ல வேண்டும். அதையெல்லாம் ஒரு ரவுண்டு கட்டினால் நிஜமாகவே கள்ளச்சாராயத்தை ஒழிக்கலாம்.

   இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் சாராய ஊறல்தான் கலங்கலாக இருக்கும், அது மஞ்சள் கலரில் தெரியும். ஆனால் டெலிவரிக்காக டியூபில் அடைக்கப்பட்டிருக்கும் சாராயம் பச்ச தண்ணிர் போல சுத்தமாக இருக்கும். அதனால் போலிசார் மலையேறி கஷ்டப்பட்டுதான் கள்ளசாராயத்தை பிடித்து அழிக்கின்றனர் என்கிறார்.

 அதுவும் சரிதான்.