நாட்டாண்மை... குளத்தை மாற்றி தோண்டு!

கு.அசோக்,
ரத்தினகிரி அடுத்த சாம்பசிவபுரத்தில் நூறு நாள் திட்டத்தின் கீழ் குள தோண்ட எதிர்ப்பு மக்கள் மறியல் போராட்டம்.
இராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த சாம்பசிவபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் தோன்றும் பணி நடைபெற்றது.
அப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்திய அப்பகுதி குடியிருப்பு வாசிகள், மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தின் போது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்ததாவது, குடியிருப்பு பகுதியில் அருகாமையில் குளம் தோண்டப்படுவதால் அப்பகுதியை சேர்ந்த சிறிய பிள்ளைகள்
குளத்தில் மூழ்கி விபத்து ஏற்படும். ஆகவே குளத்தை வேறு இடத்தில் தோண்ட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தைப் பற்றி அறிந்த 100 நாள் வேலை திட்டத்தின் மேற்பார்வையாளர் மற்றும் ரத்தினகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குளம் தோன்டும் இடத்தினை மாற்றம் செய்து போராட்டத்தினை கைவிட செய்தனர்.
முந்தைய காலத்தில் கிராமத்தின் மையப்பகுதியில் தான் குளம் இருக்கும் என்பது நினைவுக்கு வருகிறது.