திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார்!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார்!

 க.பாலகுரு,

    திருவாரூர் மாவட்டத்தின் 35 வது மாவட்ட ஆட்சியராக சாருஸ்ரீ இ.ஆ.ப. அவர்கள்  பதவி ஏற்றார்  

மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு பகுதி திருவாரூர் 1997 ஜனவரி மாதம் 1 அன்று முதல் திருவாரூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

  இதுவரை இம் மாவட்டத்தில் 34 ஆட்சியர்கள் பதவிகித்துள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 3 வது பெண் ஆட்சியராக சாருஸ்ரீ பதவி ஏற்றார்.

 2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் துணைஆட்சியராக பதவியேற்று, பின்பு வணிகவரித்துறையின் இணை இயக்குநராகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து, தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

 பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனை தொடர்ந்து உழவர்களுடன் சந்தித்து கலந்து ஆலோசிக்கவும் உள்ளதாக தெரிவித்தார்.

திருவாரூர் நகராட்சி தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் உணவு சார்ந்த தொழில்கள் உருவாக்கிட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.