மழை வெள்ளத்தில் தோல்கழிவு நீரை கலக்கும் தொழிற்சாலைகள்! விவசாயிகள் குற்றச்சாட்டு!

கு.அசோக்,
பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மிக குறைந்த அளவு உயரம் உள்ளதால் போதுமான அளவு நீரை தேக்கி மேல கொண்டு வரமுடியாது, மேலும் பாலாற்றில் தொடர்ந்து தோல் கழிவுநீர் கலக்கபடுகிறது என விவசாயிகள் வேதனை - வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் - மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்ற இதில் வேளாண்துறை தோட்டகலை,கால்நடை மின்சாரம் போக்குவரத்து உள்ளிட்ட பல்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா.
¢ இக்கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிம் செலுத்தப்பட்டது. பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் சேண்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையானது மிகவும் குறைந்த உயரத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் எவ்வாறு நீரை தேக்கி வைக்க முடியும்?மேலும் இதிலிருந்து ஏரிகளுக்கு எப்படி நீர் செல்லும் எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது, அதனை கணக்கீடு செய்து அரசு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் மகேந்திரா என்ற நெல் ரகம் மழையால் நீரில் மூழ்கி ஒரிரு நாட்களிலேயே முளைத்துவிடுகிறது.
ஆனால் கோ54,கோ55 போன்ற அரசால் வழங்கபடும் நெல் ரகங்கள் அது போன்று நீரில் மூழ்கினாலும் அவைகள் முளைக்க நாளாகும்.
மகேந்திரா நெல் ரகத்தால் விவசாயிகள் மழைகாலங்களில் பாதிகபடுவதாகவும் அவை குறித்து ஆய்வு நடத்த வேண்டுமெனவும், மேலும் குடியாத்தம் பேர்ணாம்பட்டு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் பாலாற்றில் தோல் தொழிற்¢சாலைகள் கழிவுநீரை மழைகால வெள்ளத்தை பயன்படுத்தி வெளியேற்றுகிறார்கள்,இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
மேலும் வனவிலங்குகளால், குறிப்பாக யானைகளால் நெற்பயிர்கள் சேதமடைகிறது அவைகளை தடுக்க யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தண்ணீர் உணவு ஆகியவைகளை வனத்திலேயே ஏற்பாடு செய்து வனத்துறை பயிர் சேதத்தை தடுக்க வேண்டுமென விவசாயிகள் பேசினார்கள்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட அதிகாரிகள் வழக்கம் போலவே குறித்துக் கொண்டு கூட்டத்தை இனிதே முடித்தனர்.