அமைச்சர் பொன்முடியும் அவரது மகனையும் அமலாக்க துறையினர் அழைத்துச் சென்றனர்! கைதா என பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,
இன்று திங்கட்கிழமை காலை 7 மணி முதல் தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி எம்பி ஆன கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரெட் சாண்ட் எடுத்த வகையில் அரசுக்கு 28.5 கோடி இழப்பு ஏற்படுத்தினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
அதேபோல் அவரது மகன் கௌதம சிகாமணி இத்தாலி மற்றும் ஐரோப்பாடுகளில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்து முதலீடு செய்ததாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் அவர் தொடர்பான இடங்களில் சுமார் 13 மணி நேரம் நடை பெற்றது. சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடியும் அவரது மகன் கௌதம சிகாமணியையும் அமலாக்கத் துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
காலை முதல் நடைபெற்ற சோதனையின் போது பெரிய லாக்கர் ஒன்று இருந்தது ஆனால் அதற்கு சாவி இல்லை என்பதால் ஒரு தொழிலாளியை அழைத்து வந்து மாற்று சாவி போடா முயன்று அது நடக்கவில்லை என்பதால் அதை கைவிட்டு விட்டனர்.
அதேபோல் இந்தியன் வங்கியில் இருந்து அப்ரைசர் எனப்படும் மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு பொன்முடியின் வீட்டில் இருந்த நகைகளை மதிப்பீடு செய்தனர்
இந்நிலையில் அமைச்சரின் வீட்டில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களும் அதேபோல் 70 லட்சம் பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் அமலாக்க துறையில் விசாரணைக்காக அமைச்சர் பொன் முடியும் அவரது மகன் கௌதம சிகாமணியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள இடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முறைப்படி அவர்களுக்கு சம்மன் அளித்து கைது செய்யப்படலாம் என்கின்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.