103 பாஜகவினருக்கு ஜாமீன்!

103 பாஜகவினருக்கு ஜாமீன்!

 ஜி.கே.சேகரன்,

  மாநகராட்சியை முற்றுகையிட்ட வழக்கில் சிறையிலிருந்த பாஜகவினர் 103 பேர் ஜாமீனில்  விடுதலையாகினர்    வேலூர்மாவட்டம்,பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 13 9/2022 அன்று  மாநகராட்சிக்கு மனு கொடுக்கச் சென்ற 103 பாஜகவினர் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். விஷயம் களேபரத்தில் முடிந்தது.

  இதனால் வழக்கு போட்டு கைது செய்தது காவல்து¬, பின்னர்ற அவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இதைத்தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலையிட்டு சட்ட முயற்சியை மேற்கொண்டனர்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து இன்று அனைவரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து காலை விடுதலையாகி வெளியில் வந்தனர் அவர்களை பாஜக மாநில துணை தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் கார்த்தியாயினி உள்ளிட்டோர்  பட்டாசுகளை வெடித்து வரவேற்றனர் இவர்கள் அனைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து விடுதலையாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.