செத்த பின்னர் அறிவுரை சொன்ன மருத்துவ இணை இயக்குநர்!

ஜி.கே.சேகரன்,
அரசு மருத்துவமனையின் புதிய 7 அடுக்கு மாடியில் இருந்து கீழே விழுந்து வட மாநில வாலிபர் உயிரிழந்தார். இந்த உயிர் சேதத்துக்கு பின்னர் மருத்து இணை இயக்குநர் கண்ணகி அங்கு வந்து சில அறிவுறைகளை சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 56 கோடி மதிப்பெட்டில் 7 அடுக்கு மாடி கட்டிடமாக கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஜி.எம்.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் சார்பில் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகிறது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட¢ வடமாநில இளைஞர்களை வைத்து பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் அபுதாகிர் (19) என்ற வாலிபர் ஆறாவது அடுக்கு மாடியில் கட்டிடத்திற்கு பூச்சு வேலை செய்து வந்தார்.
சப்போது அவர் திடீரென நிலை தடுமாறி மேலே இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனை அறிந்த மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் கண்ணகி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் வட மாநில வாலிபர்களுக்கு உண்டான பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார்.
மேற்படி கட்டிடத்தில் வடமாநில இளைஞர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஆபத்தான சூழலில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.