வில்வநாதன் என்பவர் யார் என்று தெரியுங்களா...... அவர் தாங்க ஆம்பூர் எம் .எல் .ஏ.!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே இறந்தவரின் உடலை பாலாற்று நீரை கடந்து ஆபத்தான நிலையில் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வாக பாதை அமைத்து தர தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை அங்குள்ள பாலாற்றை கடந்து மயானத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்படியிருக்க நேற்று அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி தனம்மாள் என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய பாலாற்றை கடந்து மயானத்திற்கு கொண்டு செல்லும் போது இடையே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆகவே அதை கடந்து உடலை தூக்கிச்சென்றனர்.
மேலும் தொடர்ந்து பாலாற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இது போன்ற நிலைமைக்கு தள்ளப்படுவதால் மயானத்திற்கு செல்லும் பாலாற்றின் வழியாக பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வில்வநாதன் என்பவர் யார் என்று தெரியுங்களா...... அவர் தாங்க ஆம்பூர் எம் .எல் .ஏ. அவரிடம் முறையிட்டு முயற்சி பண்ணி பாருங்க.