நீட் தேர்வு ரத்து செய்ய மதிமுக போராட்டம்! பாசறை பாபு துவக்கிவைத்தார்!!

நீட் தேர்வு ரத்து செய்ய மதிமுக போராட்டம்! பாசறை பாபு துவக்கிவைத்தார்!!

கு.அசோக்,

 நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

வேலூர்மாவட்டம், வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்தஆர்பாட்டமானது நடைபெற்றது.

  மாநகர செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்ற, இதில் ராணிப்பேட்டைமாவட்ட செயலாளர் உதயகுமார், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கண்ணதாசன், புறநகர் மாவட்ட செயலாளர் கௌதம், பொது குழு உறுப்பினர் பழனி ,நாசீர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இந்த ஆர்பாட்டத்தை தணிக்கை குழு உறுப்பினர் பாசறை பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று துவங்கி வைத்தார். இதில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகத்திற்கு மத்திய அரசு பட்ஜெட்டில் போதுமான நிதியை ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு கண்டித்தும் மாணவர்களின் தற்கொலைக்கு வித்திடும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட்டை ரத்து செய்ய கோரியும் திரளான மதிமுகவினர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.,