திருப்பத்தூரில் கட்டுகட்டாக போதை வஸ்த்துக்கள்!

திருப்பத்தூரில் கட்டுகட்டாக போதை வஸ்த்துக்கள்!

ஜி.கே.சேகரன்,

 அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் விற்பனை செய்த 3  கடைகளுக்கு சீல் 3 பேர் கைது செய்து போலீசார் நடவடிக்கை!

   திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் அரசியல் தடை செய்யப்பட்ட  ஹான்ஸ், குட்கா போன்ற  போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு தொடர்ந்து வந்த புகாரின் பேரில் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையிலான போலீசார் வாணியம்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது நேதாஜி நகர் பகுதியில் ராஜேந்திரன், மில்லத் நகர் நசீர்  ஆகியோரின்  பெட்டிக்கடைகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது, கடையில் பதுக்கி வைத்திருந்த 50 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ் குட்கா பாக்கெட்டுகளை  பறிமுதல் செய்தனர்.

  இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத், வருவாய் ஆய்வாளர் தேவகுமார் தலைமையிலான வருவாய் துறையினர் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தொடர் சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், விற்பனை செய்பவர்களின் சொத்துக்களும் முடக்கப்படவும் உள்ளது.

   இதே போல் ஆம்பூர் ரெட்டிதோப்பு 5 ஆவது தெருவில் செயல்பட்டு வரும் நகர துணைத் தலைவர் மணி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட  போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டறிந்து  வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர காவல் துறையினர் கடைக்கு சீல் வைத்து மணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.