செத்து போனவர்களுக்கு வீட்டுமனை பட்டா! அடடே  அலுவர்களாப்பா?

செத்து போனவர்களுக்கு வீட்டுமனை பட்டா! அடடே  அலுவர்களாப்பா?

   ஜி.கே.சேகரன்,

   செத்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நபருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக அரசு அதிகாரிகள் அவர்களுய கடமையுணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

  திருப்பத்தூ£ ¢மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பந்தாரபள்ளி பகுதி ஆதிதிராவிடர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு சார்பில்  இலவச வீட்டு மனை பட்டா வழங்கபட பயனாளிகளை தேர்வு செய்தனர்.

  இதில் அரசு பணியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மற்றும் வசதி படைத்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதே போல் செத்து 20 ஆண்டுகள் ஆனவருக்கு பட்டா வழங்கியிருக்கிறார்கள்.

   இதில் ஒரே பட்டாவை இரண்டு, மூன்று பேருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

  மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென இன்று காலை திருப்பத்தூர் நாட்றம்பள்ளி  செல்லும் வழியில் பந்தாரபள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்றம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

¢  பின்னர்,சாலையில் போடப்பட்ட கற்களைக் போலீசார் அப்புறப்படுத்தினர் அப்போது  போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி அரசு அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் சாலை மறியல்  கலைந்து சென்றனர்.

 இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.