இடிந்து விழும் கட்டிடத்தில் செல் போன் டவரா? மறியல் தீக்குளிக்க முயற்சி!

ஜி.கே.சேகரன்,
வேலூர் வசந்தபுரம் பகுதியில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் புதியதாக செல்போன் டவர் அமைப்பதா? என எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் தீகுளிக்க முயற்சி.
வேலூர்மாவட்டம், வேலூர் வசந்தபுரம் பர்மா காலணி பகுதியில், அப்போதையை முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களால் பர்மா காலணி வீடுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு தனிநபர் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் சிதிலமடைந்துள்ள வீட்டில் ஏர்டெல் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வசந்தபுரம் பர்மா காலணி பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வசந்தபுரம் பகுதியிலிருந்து வேலூர் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் பேபி அவர்களின் தலைமையில்
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பெண் ஒருவர் மண்ணெண்ணய்யை ஊற்ற முயன்று தீகுளிக்க முயன்றார் இதனால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தரதரவென இழுத்து சென்றனர்.
பின்னர் காவல்துறையினர் தெற்கு இன்ஸ்பெக்டர் பேபி அவர்களின் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டவரை பாழடைந்த கட்டிடத்தின் மேல் இருந்து அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.