ஆபரஷேன் கஞ்சாவில் முப்பது லட்சம் ரூபாய் அளவில் போதைப்பொருள் பறிமுதல்!

ஆபரஷேன் கஞ்சாவில் முப்பது லட்சம் ரூபாய் அளவில் போதைப்பொருள் பறிமுதல்!

   மூ.பிரதீப்,

   தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் மாநிலம் முழுவதிலும் 28.03.2022 முதல் 27.04.2022 வரை " ஆப்ரேசன் காஞ்சா 2.0 " வேட்டை நடத்த உத்திரவிட்டுள்ளார் .

   அதன் பேரில் , வேலூர் மாவட்ட காவல்துறையினர் கடந்த 22 நாட்களாக ( 28.03.2022 தேதி முதல் 18.04.2022 - ம் தேதி வரை ) மாவட்டம் முழுவதிலும் கஞ்சா ( ம ) குட்கா தொடர்பான தீவிர வேட்டையில் ஈடுபட்டு இதுவரை கஞ்சா தொடர்பாக மட்டும் 28 வழக்குகளில் 33 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தும் , அவர்களிடமிருந்து ரூ .7,38,000 / - மதிப்பிலான சுமார் 73.8 கிலோ அளவிலான கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

 மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 மேலும் குட்கா தொடர்பாக இதுவரை மொத்தம் 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , அதில் 144 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் . அவர்களிடமிருந்து ரூ .23,60,500 / - மதிப்பிலான சுமார் 2,739 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் , அவர்களிடமிருந்து கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 இந்த தகவலை காவல் ஆய்வாளர் மாவட்ட தனிப்பிரிவு, வேலூர் மாவட்டம் அவர்கள் தெரிவித்துள்ளார்.