முன் அறிவிப்பு இல்லாமல் சாத்தப்பட்ட கேட்! பொதுமக்கள் அவதி!

முன் அறிவிப்பு இல்லாமல் சாத்தப்பட்ட கேட்! பொதுமக்கள் அவதி!

ஜோ,

 வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக நான்கு நாள் மூடப்பட்டு உள்ளது.

 இது குறித்து எந்தவித முன் அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதால் பொதுமக்கள் முகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

  குறிப்பாக அவ்வழியே வந்த வாகனங்கள் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  மேலும் பள்ளி வாகனங்கள் கனரக வாகனங்கள் அவ்வழியே செல்ல முடியாததால் ஊரை சுற்றி செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

 இந்த நிலையில் நாளை ஆளுநரும் வர உள்ளார் என்பது நினைவு கூற தக்கதாகும்.